குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

 

அக்பர் பிறந்தால் விழாவில், அவரது தந்தை கொடுத்த விலையுயர்ந்த 

மோதிரத்தை தொலைத்து விட்டார்.. பீர்பால்  நீதிமன்றத்திற்கு வந்த போது,

அக்பர், நான் என் தந்தை எனக்கு கொடுத்த மோதிரத்தை தொலைத்து விட்டேன். 

அந்த மோதிரத்தை கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவுங்கள்  என்றார்.

பீர்பால், உடனே நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் இப்போதே கண்டுபிடிக்கிறேன்

என்றார்.உங்கள் மோதிரம்  இங்கு இருக்கும்  நபரிடம் தான் இருக்கிறது.

திருடியவரின் தாடியில் கண்டிப்பாக வைக்கோல் இருக்கும் என்று அரசவையில்

கூறினார். திருடியவர் அதிர்ச்சியடைந்து, உடனே தன் தாடியை தொட்டுப்பார்த்தார்.

அந்த நபரின் செயலை கவனித்த பீர்பால் கைகாட்டி, இந்த நபரை சோதனை

செய்யுங்கள், இவனிடம் தான் மோதிரம் இருக்கும் என்று கூறினார்.

பீர்பால் கூறியபடியே, அந்த நபரிடம் மோதிரம் இருந்தது.

ஆனால் பீர்பால் எப்படி கண்டுபிடித்தார் என்று பீர்பாலிடம் கேட்டார் அக்பர்

அதற்கு பீர்பால் , தப்பு செய்தவன் அதாவது குற்றவாளி எப்போதும் பயப்படுவார்

என பதிலளித்தார்.

நீதி : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்